Sunday, 24 May 2020

பிறை சர்ச்சையும் தெளிவும்


"பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் பிறை பார்த்து நோன்பை விட வேண்டும் மேக மூட்டமாக இருந்தால் அந்த மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும்".
இது நோன்பை ஆரம்பிப்பது மற்றும் முடிப்பது பற்றிய நபி வழி ஆகும். ரமலான் அல்லது ஷவ்வால் பிறை தென்படாத போது ஷஃபான் அல்லது ரமலானை முப்பதாக முழுமை படுத்தவேண்டும்.
இதை நன்கு கவனித்து பார்த்தால் அடுத்த மாதத்தின் ஒரு பிறை தான் முந்திய மாதத்தில் நுழைகிறது அதனால் அடுத்த மாதத்தின் முதல் பிறை என்பது உண்மையில் இரண்டாம் பிறை தான். எனினும் நிர்வாக ரீதியில் நாம் முதல் பிறை என்கிறோம் இது மேற்கண்ட நபி மொழியின் மூலம் தெளிவாகிறது மேலும் இது தான் இஸ்லாமிய உலகின்  நடைமுறை ஆகும்.
இதன் மூலம் நமக்கு சொல்லப்படுகின்ற செய்தி என்ன வென்றால் "பிறையில் ஒன்று விடுபட்டாலும் உங்கள் ஒற்றுமையில் துண்டு பட்டு விடக்கூடாது என்பது தான்".
பிறையை அறிவிப்பதற்கு என்று ஒரு நிர்வாகம் உண்டு. அது தான் அதைச் செய்யும். எல்லா நாடுகளிலும் அதன் அரசாங்கம் இதை ஏற்பாடு செய்துள்ளது தனி நபர்கள் பிறை பார்த்தால் அதை அந்த நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் அது அவரது நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு ஏற்கும் அல்லது புறக்கணிக்கும் இது தான் நடைமுறை.
இந்த நடைமுறை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ளது நமது தமிழகத்திலும் உள்ளது. அது தான் தலைமை காஜியும் மற்ற மாவட்ட காஜிகளும் ஆவார்கள் இதன் நோக்கமே இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.
தமிழக முஸ்லிம்கள் இதை மனப்பூர்வமாக ஏற்று செயல்பட்டு ஒற்றுமையை கடைபிடித்தார்கள்  அந்த ஒற்றுமையில் எந்த பங்கமும் ஏற்படவில்லை ஆனால் எப்பொழுது நபி வழி சகோதரர்கள் வந்தார்களோ அவர்களுக்கு இந்த ஒற்றுமை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது ஏனெனில் சமூகம் ஒற்றுமையாக இருந்தால் அவர்களின் கொள்கைக்கு அவசியம் இல்லாமல் போய் விடும் ஆகையால் சமூகத்தை கூறு போட முயற்சி செய்தார்கள் அதற்கு அவர்கள் ஏவிய  முதல் அம்பு காஜியின் அறிவிப்பை ஏன் ஏற்க வேண்டும் என்பது தான்.
அதன் பிறகு சர்வதேச பிறை, கணிப்பு பிறை, தவ்ஹீத் காஜியார் பிறை என்று பல பிறைகளும் அதன் அடிப்படையில் பல பெருநாள்களும் வந்து விட்டது
அது மட்டுமல்ல புற்றீசல் போல் பல அமைப்புகளும் அவர்களுக்குள்ளேயே உருவாகியது உருவாகிக் கொண்டிருக்கிறது இனியும் உருவாகும் அப்போது பெருநாட்களின் எண்ணிக்கை இன்னும் கூடும்
ஆக அவர்களின் கொள்கை அவர்களுக்குத்தான் அடுத்தவருக்கு அல்ல மேலும் அவர்களின் கொள்கை அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது அல்ல அப்படி இருந்தால் அவர்களுக்குள் இத்தனை பிரிவுகள் வந்து இருக்காது மேலும் அவர்களில் ஒவ்வொருவரும் அவரது தலைமைக்கே கட்டுப்படுகிறார்கள் மற்ற தலைமைக்கு அல்ல ஏனெனில் அவர்களின் பார்வையில் மற்ற தலைமையும் அமைப்பும் வழி கேட்டில் உள்ளது இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் அவர்கள் எல்லோரும் "நபி வழி" என்று கூறக் கூடியவர்கள் தான்.
அப்படி இருக்கும் போது அவர்கள் நமது தலைமைக்கு கட்டுபடுவார்கள் என்பது சாத்தியமில்லை கட்டுப்பட வேண்டும் என்ற அவசியமுமில்லை எனவே பிறை விஷயத்தில் நாம் சரியான வழியில் தான் பயணிக்கிறோம் நமது வழியை நாம் அவர்கள் மீது திணிப்பதில்லை அது போல் அவர்கள் தங்களது கொள்கையை நம் மீது திணிக்காமல் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம் ஏனெனில் நாம் அவர்களின் கொள்கையை ஏற்க வில்லை
ஆனால் வலுக்கட்டாயமாக திணிக்கின்றார்கள்  இதற்கு அவர்களின் பிறை குழப்பமே சான்று தவ்ஹீத் காஜியார் பிறை அறிவிப்பு என்பது அந்த அமைப்பினருக்கு மட்டுமே. ஆனால் அறிவிப்பு செய்யும் போது ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் குழப்பி அப்பாவி மக்களை சந்தேகத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.
இனிமேலாவது தங்களது செயல்பாடுகள் தங்களது அமைப்பினருக்கு மட்டுமே என்று செயல் பட்டால் நல்லது
"அவரவது வழி அவரவருக்கே"
ல(க்)கும் தீனு(க்)கும் வ லிய தீனி

இப்ராஹிம் அன்வாரி
கடையநல்லூர்.

Friday, 3 April 2020

டாக்டர்களுக்கு ராயல் சல்யூட்





பெங்யின் ஹூயே
சீனா
ஷீரீன் ரூஹானி
ஈராான்







லீ வென்லியாங்
சீனா














உசாமா ரியாஸ்
பாகிஸ்தான்
        
மார்செல்லோ நடாலி
இத்தாலி



2004-ல் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரான ஆழிப் பேரலைக்குப் பிந்தைய ஓர் நாளில், மெரினா கடற்கரையை ஒட்டி வாழும் குடிசைப்பகுதி மக்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்ணிடம், “நீங்கள் எப்படிக்  காப்பாற்றினீர்கள்?” என்று கேட்டேன். “நான் எங்கே காப்பாற்றினேன்?
 எல்லாம் ஒரு நொடியில் நடந்து விட்டது. எங்கெங்கும் கடல்நீர் சூழ்ந்திருந்தது. எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் யோசிக்காமல், உயிர் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினேன். என் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினேன்” என்று அழுதபடியே கூறினார். அவர் என்றில்லை, அந்த இடத்தில் நாம் இருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருக்க முடியும்.
உயிருக்கு ஆபத்து என்றால் எதைப் பற்றியும் நினைக்காமல், அனிச்சையாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முற்படுவதே மனிதர்களின் / உயிரினத்தின் இயல்பு. இன்றைய கோவிட்-19 தாக்குதல், ஆழிப்பேரலையைவிடப் பெரிது; ஆபத்தானது; வீரியமிக்கது. இருந்தாலும் ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மனித இனத்தைக் காக்கும் ஒற்றை நோக்கத்துடன், உலகம் முழுவதும் மருத்துவர்களும் செவிலியர்களும் அயராமல் போராடிவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில், மருத்துவர்கள் சிலரும் பாதிக்கப்பட்டு, தங்கள் உயிரை இழந்துள்ளனர். அப்படி உயிரிழந்த குறிப்பிடத்தக்க மருத்துவர்களைப் பற்றிப் பார்ப்போம்:
லீ வென்லியாங், சீனா
கடந்த டிசம்பர் இறுதியில், சீனாவின் பிரபல சமூக வலைத்தளத்தில், “அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ, வூகான் மத்திய மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்” எனத் தொடங்கும் பதிவை லீ வென்லியாங் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்தப் பதிவில், வைரஸால் தாக்கப்பட்ட பல நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள் என்றும், இது சார்ஸ் வைரஸாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். சக மருத்துவர்களை எச்சரித்து, முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.
இதற்கு பதிலடியாக, சமூக ஒழுங்குக்கு ஊறுவிளைவிக்கும் பொய்த் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தி, அவரிடமிருந்து ஒரு கடிதத்தை சீனாவின் பொதுச் சுகாதாரத் துறை பெற்றது. வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தும்படி காவல்துறையும் அவரை எச்சரித்தது. ஒரே வாரத்திலேயே அவருடைய எச்சரிக்கை உண்மையானது.
ஜனவரி 10-ல், அவரும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது. அதையும் மீறி, தன்னுடைய மருத்துவக் கடமையை நிறுத்தாமல் அவர் தொடர்ந்தார். பிப்ரவரி 6-ல் தன்னுடைய 33 வயதில், அந்த வைரஸ் தொற்றுக்கு அவரே பலியாகிவிட்டார். தற்போது சீன அரசும் காவல் அதிகாரிகளும் லீயிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இன்று லீ நம்முடன் இல்லை. ஆனால், அவரால் உயிர் பிழைத்த பலர் நம்மிடையே வாழ்கிறார்கள்.
பெங் யின்ஹுயே, சீனா
29 வயதே நிறைந்த பெங், வூகானில் மருத்துவராகப் பணியாற்றினார். கடந்த பிப்ரவரி 1-ல் அவருக்குத் திருமணம் நடப்பதாக இருந்தது. கரோனா வைரஸ் தாக்குதலின் பரவல் வூகானில் தீவிரமடைந்ததால், தன்னுடைய திருமணத்தை ஒத்தி வைத்தார். கரோனா வால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சையும் அளித்தார்.
ஆனால், கோவிட்-19 அவரை விட்டுவைக்க வில்லை. கோவிட் 19 தொற்றின் காரணமாக, ஜனவரி 25-ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோயின் பாதிப்பு அதிகமானதால், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். உயர்தர சிகிச்சையும் மருத்துவர்களின் போராட்டமும் கரோனாவிடம் தோற்றுப்போயின. தன்னுடைய மருத்துவ சேவை, வருங்கால மனைவி என அனைத்தையும் துறந்து பிப்ரவரி 21 அன்று அவர் மரணத்தைத் தழுவினார்.
மார்செல்லோ நடாலி, இத்தாலி
இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் மார்செல்லோ நடாலி (57). இத்தாலியில் நிறைய மருத்துவர்கள், கோவிட்-19 தாக்குத லுக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரிக்கை மணியடித்தவர் இவரே. கையுறைகள் பற்றாக்குறை காரணமாக, கையுறை இன்றியே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தன்னுடைய அவலநிலையை, கோபத்துடனும் இயலாமையுடனும் ஒரு இதழுக்கான நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
ஆன்ட்டி பயாடிக் கண்டுபிடிப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில், மாத்திரையே எந்த நோய்க்கும் தீர்வு என்ற மனநிலையில் இருக்கும் தம்மைப் போன்ற இத்தாலிய மருத்துவர்கள், கோவிட்-19 தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லையென்றும் அதில் பதிவுசெய்தார். இருந்தபோதும் குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், தன்னால் இயன்றவரை நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். பாதுகாப்புக் கவசங்கள் பற்றாக்குறை காரணமாக, அவரும் கரோனா தொற்றுக்கு உள்ளானார். தீவிர சிகிச்சைக்காக மிலனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி, மார்ச் 24-ல் உயிரிழந்தார். கரோனாவுக்குப் பலியான 13 இத்தாலிய மருத்துவர்களில் இவரும் ஒருவர்.
ஷீரின் ரூஹானி, ஈரான்
கரோனாவின் பாதிப்பு ஈரானில் வெகு தீவிரமாகப் பரவியதாலும், உயிர்ப் பலி தொடர்ந்து அதிகரித்ததாலும், அங்கே மருத்துவர்கள் ஓய்வின்றிப் பணியாற்றி னார்கள். ஷோஹாதா மருத்துவமனையின் மருத்துவரான ஷீரின் ரூஹானி அவர்களில் ஒருவர். விரைவில் அவரும் கரோனா பாதிப்புக்கு உள்ளானார். மருத்துவர்களின் பற்றாக்குறை ஈரானில் நிலவியதால், சிகிச்சையில் இருந்த போதும் நோயாளிகளுக்குத் தொடர்ந்து அவர் சிகிச்சையளித்துவந்தார்.
நரம்புவழியே மருந்தும், மூக்கு வழியே திரவமும் செலுத்தப்பட்ட போதும், கரோனா நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை யளித்தார். உடல்நலம் மோசமடைந்ததால், பல மருத்துவமனைகளுக்கு ஷீரின் மாற்றப்பட்டார். கடந்த மார்ச் 18-ல் உடல்நிலை பெரிதும் நலிந்து, அவர் உயிரிழந்தார். கடைசி நிமிடம்வரை மருத்துவ சேவையாற்றிய ஷீரினை, ஒட்டுமொத்த ஈரானும் கண்ணீருடன் வழியனுப்பிவைத்தது.
உசாமா ரியாஸ், பாகிஸ்தான்
ஈரான் நாட்டின் எல்லையை ஒட்டியிருக்கும் பாகிஸ்தானின் டஃப்தான் நகரில் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்குள்ள நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சையளித்து வந்தார் உசாமா ரியாஸ். அவருடைய தன்னலமற்ற மருத்துவ சேவை, மக்களாலும் அரசாலும் பாராட்டப்பட்டது. 'பாகிஸ்தானின் ஹீரோ' என்று அந்நாட்டு ஊடகங்கள் அவரைப் பாராட்டின.
பாதுகாப்புக் கவசங்களின் பற்றாக்குறை காரணமாக, சாதாரண முகக்கவசத்தை மட்டும் அணிந்தபடி நோயாளிகளுக்கு அவர் சிகிச்சையளித்துவந்தார். இதன் காரணமாக விரைவில் அவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. படுக்கையில் வீழ்ந்தார். மூன்று நாள் போராட்டத்துக்குப் பின்னர் அவருடைய வாழ்க்கை முடிந்துபோனது. இன்று உலக நாடுகள் அவரைப் போற்றுகின்றன. ஆனால், மரணப் படுக்கையிலிருந்தபோது, ஸ்கேன் எடுப்பதற்கான வசதிகூட அவருக்குக் கிடைக்கவில்லை.
இந்திய மருத்துவர்கள்
இந்தியாவில் நான்கு மருத்துவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மூவர், தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது ஏற்பட்ட தொற்றின் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளான வர்கள். மும்பையின் சைஃபி மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொருவருக்கு, இங்கிலாந்திலிருந்து வந்த உறவினரால் தொற்று ஏற்பட்டது. 85 வயதான அந்த மருத்துவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பேஸ்மேக்கர் கருவியும் அவருக்குப் பொருத்தப்பட்டிருந்தது.
வயது முதிர்வு, ஏற்கெனவே இருந்த உடல் உபாதைகள் காரணமாக, கரோனாவின் பாதிப்பு அவருக்குத் தீவிரமாக இருந்தது. இந்துஜா மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பயனின்றி அவர் உயிரிழந்தார். இந்தியாவில் கரோனா பாதிப்புக்குப் பலியான முதல் மருத்துவர் அவர். டெல்லியின் மொஹல்லா மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடைய மருத்துவமனைக்கு வந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவரை மதிப்போம்
மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது, மரணத்தைவிடக் கொடியது. மரணவாசலில் நிற்பவர்களுக்கு நம்பிக்கை யளிப்பதற்கும் அவர்களைக் காப்பாற்ற இறுதிவரை போராடுவதற்கும் அசாத்திய மனஉறுதி தேவை. ஒவ்வொரு மரணமும் அந்த மனஉறுதியை சற்றே அசைத்து, மனத்தைப் பலவீனப்படுத்தும். இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்த நோயாளிகளின் முகத்தைத் தன்னால் மறக்க முடியவில்லை என்கிறார். நோயாளிகளின் வேதனை ஓலம் தம்முடைய செவியில் இன்னும் ஒலித்துக்கொண்டிருப்பதாக மற்றொரு மருத்துவர் கூறுகிறார்.
இதையெல்லாம் மீறி, மக்களுடைய நலனுக்காக உலகெங்கும் மருத்துவர்கள் போராடிவருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் தன்னுடைய 9 வயது மகளை வீட்டில் தனியே விட்டுவிட்டு, மருத்துவமனையிலேயே தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளிகளின் கடைசி விருப்பங்களைக் குறித்துவைத்துள்ளார். உலகம் கரோனா தொற்றிதிலிருந்து மீண்டபின், அந்த விருப்பங்களை நிறைவேறுவேன் என்று அவர் உறுதிகூறுகிறார்.
இத்தனைக்குப் பிறகும் உலகெங்கும் மருத்துவர்கள் இன்றைக்குத் தாக்கப்பட்டுவருகிறார்கள். நம் நாட்டிலோ கரோனா பரவிவிடும் என்ற வீண் அச்சத்தின் காரணமாக, மருத்துவர்களை வாடகை வீட்டைவிட்டு வெளியேற்றும் அவலமும் நடக்கிறது. மருத்துவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தாம். ஆனால், நம்மைப் போன்று அவர்கள் தமக்காக மட்டும் வாழவில்லை, நமக்காகவும் வாழ்கிறார்கள்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in












கொரோனா கொல்வது மனிதனையா? மனிதத்தையா?


கொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

-சு.வெங்கடேசன் எம்.பி.

முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூர மனநிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.

கேரளாவில் கூலிவேலை  பார்க்கச்சென்ற முஸ்தபா என்னும் இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன் மதுரைக்குத் திரும்பி முல்லைநகரில் உள்ள அவர் அக்காவின் வீட்டில் இருந்துள்ளார். இரண்டுமூன்று நாள்களாக காய்ச்சல் கண்டிருந்ததால், வீட்டிலேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார். இவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அக்கம்பக்கம் எங்கும் செய்தி பரவியுள்ளது. சிலர் காவல்துறைக்கும் போன் போட்டுச் சொல்லியுள்ளனர். காவலர்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர். சிறிதுநேரத்தில் குட்டியானை எனச் சொல்லப்படுகின்ற டாட்டா ஏசி வண்டியில் முஸ்தபாவையும் அவர் அம்மாவையும் ஏற்றுகின்றனர்.

அருவருப்பும் அவமானமும் ஊட்டுஞ்செயலாக அச்செயல் நடந்தேறி இருக்கிறது. இந்தக் காட்சியை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் செல்போனில் படமாக்கப்பட்டு “முல்லைநகரில் கொரோனா நோயாளி அழைத்துச் செல்லப்படுகிறார்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருக்கிறது.

முஸ்தபாவையும் அவர் அம்மாவையும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில்  பரிசோதித்து இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அன்று இரவு தெற்குவாசல் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சேர்கிறார் முஸ்தபா.

இதற்கிடையில் முஸ்தபாவை முல்லைநகரில் டாட்டா ஏசியில் ஏற்றிய காட்சி சமூக ஊடகங்கள் எங்கும் பரவிவிட்டது. முஸ்தபா அவரது வீட்டுக்கு வருவதைப் பார்த்தவர்கள் சிறிதுநேரத்திலேயே ஒன்றுகூடி, “இவர் கொரோனா நோயாளி. இங்கு இருக்ககூடாது. இவர் இருந்தால் எங்களுக்கும் பரவிவிடும்” என்று பிரச்சனை செய்யத் தொடங்கியுள்ளனர். இரவு 12 மணியிலிருந்து 2 மணிவரை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முஸ்தபா வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார். கூட்டத்தினரை, காவல்துறை வந்து தலையிட்டுச் சமாதானப்படுத்தியுள்ளது.

அதிகாலையில் குப்பை லாரியில் முஸ்தபாவை ஏற்றி மீண்டும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளனர்.

மருத்துவர்களோ, “நேற்றுத்தானே இவருக்கு கொரோனா இல்லை என்று சொல்லி அனுப்பினோம். மீண்டும் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்று கூறியபடி மறுபடியும் பரிசோதித்து அன்று மாலை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

மீண்டும் அவர் வீடுவந்து புறக்கணிப்பையும் அவமதிப்பையும் தொடர்ந்து சந்தித்துள்ளார். இந்நிலை தொடர்ந்து நீடிக்க, அவமானத்தின் அழுத்தமும் வெறுப்பும் முழுமையாகச் சூழ செவ்வாய்க்கிழமை காலை  இரயிலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டார். 

காய்ச்சல் கண்ட அந்த இளைஞரைக் கொன்றது கிருமி அன்று; நமது சமூகம்.

ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு அவரைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற அக்கறையும் பொறுமையும் அங்கிருந்த யாருக்கும் ஏன் இல்லாமல் போயின?  இரண்டு இடங்களிலும் காவல்துறையைச் சார்ந்தவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் ஏன் ஆம்புலன்சை வரவைக்க ஏற்பாடு செய்யவில்லை? டாட்டா ஏசி வாகனத்தில் அவர் ஏற்றிச்செல்லப்படும் அந்தக் காட்சியைப் பார்க்கையில் social stigma எனும் சொல்லின் முழுமையான-உண்மையான-பொருள் காட்சியாகவே இருந்தது.
விளிம்புநிலை மனிதர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் நடத்தலாம் என்ற பொதுபுத்திக்கு மற்றுமொரு சாட்சியமாக இந்த நிகழ்வு நடந்துள்ளது.  பாதிப்பில்லை என தெரிந்த பின்னரும் அந்த சமூகம் கொடுத்த வலி பெரிதினும் பெரிதாய் இருந்ததன் விளைவே அந்தத் துர்மரணம்.

கொரோனாவில், தேவை போதிய இடைவெளியே தவிர, சமூக ஒதுக்கம் அன்று. தும்மலும் எச்சிலும் பட்டுவிடக்கூடாது என்பது கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே. அன்று, எச்ஐவி நோயில் நாம் கொடுத்த சமூக விலக்கலினால் ஒதுக்கலினால் மாய்ந்தவர்கள் ஏராளம். அப்படியான ஒதுக்கல் இங்கே மறுபடியும் தொடங்கக் கூடாது.

உரிய பாதுகாப்புடன் அரவணைத்து அவரை அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் "உன் உடன் நாங்கள் இருக்கின்றோம்" என சொல்லியிருக்க வேண்டாமா? இனி வரக்கூடிய நாள்களில் இப்படியான உதவிகள் நம் குடும்பத்தாருக்கோ சக மனிதருக்கோ நம் அலுவலக நண்பருக்கோ உடனிருக்கும் தோழருக்கோ தேவைப்படலாம். அப்போது தெறித்து ஓடாமல், விலக்காமல் உரிய பாதுகாப்புடன் உடன் நிற்பதும் ஆறுதல் மொழியுடன் உரிய சிகிச்சை அளிக்க உதவுவதும் மட்டுமே நாம் மனித இனம் எனச் சொல்லிக்கொள்வதிற்கு அர்த்தம் சேர்க்கும். கிருமி நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, சமூகத்தின் விலக்கல் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு பலமடங்கு அதிகம்.

மன அழுத்தம் அதிகரிக்கும் காலமிது. இந்தத் தவிர்க்க முடியாத முடக்கத்தில். நம்மை சுயசிந்தனையோடு உருவாக்காத
கல்விமுறை, பக்கவாட்டுச் சமூகத்தை பார்க்கவிடாமல் ஓட வைத்த பாடப்புத்தகங்கள், ஒட்டி வாழக்கற்றுக் கொடுக்காத துரித வாழ்வு,
பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்டே மனிதர்களை எடைபோடும் புத்தி,
ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் இலக்கியங்களைக் காட்டாத மதிப்பெண் இலக்கணங்கள் என எல்லாமும் சேர்ந்து இப்படி ஒரு சவால் வரும்போது திடத்துடன் சந்திக்கும் மனவலிமையை நமக்குத் தரவில்லை.

“என்ன ஆனாலும் நாங்க இருக்கோம்டா ஒங்கூட” என்ற சொல் எவ்வளவு வலிமைவாய்ந்தது.  அந்த ஒற்றைச் சொல் எந்த மனிதனிடமும் கிடைக்காததால்தானே பத்து கிலோமீட்டர் நடந்தே போய் சரக்கு இரயிலிலே பாய்ந்து மாய்ந்திருக்கிறார் முஸ்தபா.

நண்பர்களே! சீக்கிரமே கடந்து போய்விடும் கொரோனாவும் வீட்டிற்குள் முடங்கிய இந்தக் காலமும். ஆனால் நாம் பயந்து, பதட்டப்பட்டு, பீதியாகி அழுத்ததிற்குள் நம்மைத் தொலைத்துவிட வேண்டா.

இந்த நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் முதுகலை படிக்கின்ற மருத்துவ மாணவர்களையும் எண்ணிப்பாருங்கள். அவர்களுக்கு நூறு சதவிகித பாதுகாப்பான அனைத்துக் கருவிகளையும் அரசு வழங்கிவிட்டதா? நிச்சயம் இல்லை. விரைவில் வழங்க வேண்டும் என நான் உள்பட பலரும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றோம். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஊழியரும் அங்கு இரவுபகலாக பணியாற்றுகின்றனர். நமது அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் ஊழியர்களும் கொரோனா வார்டில் பணியாற்ற சுழற்சிமுறையில் அட்டவணைப் போடப்பட்டுள்ளது. ஒருமுறை கொரோனா வார்டில் பணியாற்றினால் 15 நாள்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அவர்கள் அனைவரும் பணிக்கப்பட்டிருக்கின்றனர். அந்த சூழலில்தான் அனைவரும் பணியாற்றுகின்றனர். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே! நம் குடும்பத்து உறவுகள்தானே!

அவர்கள் கொரோனா நோயாளிகளை ஒதுக்கும் முடிவையோ, கைவிடும் முடிவையோ எடுத்தால் நாம் என்னவாவோம்? சமூகம் என்னவாகும்?

மதுரை மக்களே, கொரோனாவினால் ஏற்பட்ட முதல் மரணம் மதுரையில் நிகழ்ந்தது. எல்லோருக்கும் அதிர்ச்சையைக் கொடுத்தது அது. நாம் மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை கொடுத்தது.

ஆனால் முஸ்தபாவின் மரணம், கொரோனாவால் நிகழ்ந்தன்று. இது தற்கொலையுமன்று. கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலை.

@Su Venkatesan MP

#மக்கள்_அவை #maduraiMPwrites #lockdown #stayathome

Sunday, 29 March 2020

நாவல்

🙏🌹🙏🌹🙏

*சுஜாதா நாவல்கள் மொத்த தொகுப்பும்...* 👇👇👇

*நாவல் பிரியர்களுக்கு*
*ஒரு வரப்பிரசாதம் ...*

 👉🏼 https://t.co/CgYSjTwxuy


👇👇👇👇👇👇👇👇👇👇👇

*ராஜேஷ்குமார் 110 கிரைம்  நாவல்கள் ஒரே இடத்தில்*

http://priyanthandotscrapbook.blogspot.in/2014/12/110.html?m=1

*ரமணிசந்திரன் நாவல்கள்*

https://drive.google.com/drive/mobile/folders/1alJatkfDHkK9kVSuYjY3_HuRc2ZqCWkz

*தமிழ்வாணன் நாவல்கள்*

https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONWkdJR1g2RW1iQTQ?usp=drive_open

*சாண்டியலன் நாவல்கள்*

https://drive.google.com/open?id=0B0m0ndy275awcTZ6aW5WZ2lZcFU Avani Sundari

https://drive.google.com/open?id=0B0m0ndy275awVEFyRG5SUFdySUE  Chandramathi

https://drive.google.com/open?id=0B0m0ndy275awdlJKUGxsMkt1aU0 Cheran Selvi

https://drive.google.com/open?id=0B0m0ndy275awSVRNaVRwbHR5dkE  Chittaranjani

https://drive.google.com/open?id=0B0m0ndy275awMVV5WVMtdzNJZlE Ilaiya Raani

https://drive.google.com/open?id=0B0m0ndy275awRXQ2ZTZpalFJTnM  Indirakumari

https://drive.google.com/open?id=0B0m0ndy275awa3lIdlhXX0N2RGs  Jaladeepam Part-1

https://drive.google.com/open?id=0B0m0ndy275aweFFPbm43cWJHMUE  Jaladeepam Part-2

https://drive.google.com/open?id=0B0m0ndy275awTno5N3Y5RTlYVFk  Jaladeepam Part-3

https://drive.google.com/open?id=0B0m0ndy275awQWc5dkR5eDl2ZEk Jeeva Bhoomi

https://drive.google.com/open?id=0B0m0ndy275awZkdRMmd4TWlHS00 Kadal Pura Part-1

https://drive.google.com/open?id=0B0m0ndy275awRzg1MjVlVF81Rms Kadal Pura Part-2

https://drive.google.com/open?id=0B0m0ndy275awSUVLVTBETFZrS2M Kadal Pura Part-3

https://drive.google.com/open?id=0B0m0ndy275awdE13RjBDcHZZUkk Kadal Vendhan

https://drive.google.com/open?id=0B0m0ndy275awUkY2UWhrQ25YQWc Kadal Rani

https://drive.google.com/open?id=0B0m0ndy275awdE13RjBDcHZZUkk Kadal Vendhan

https://drive.google.com/open?id=0B0m0ndy275awNEhaZzZQTm1RQUk Kanni Maadam

https://drive.google.com/open?id=0B0m0ndy275awUlpfZmRYYmIyZ3c Kavarntha Kangal

https://drive.google.com/open?id=0B0m0ndy275awZTVKMmVOa09pU00  Madhaviyinmanam

https://drive.google.com/open?id=0B0m0ndy275awQzQ5YWwzTWE1UVU  Madhumalar

https://drive.google.com/open?id=0B0m0ndy275awLXROTGVOZXl6aWM Malai Arasi

https://drive.google.com/open?id=0B0m0ndy275awZUtibjU3MW04cUE Malai Vaasal

https://drive.google.com/open?id=0B0m0ndy275awSUdoaTN5SkRFU2s Manjal Aaru

https://drive.google.com/open?id=0B0m0ndy275awdGcwcE9fdG9ZRFk Manmalar

https://drive.google.com/open?id=0B0m0ndy275aweG5pZWE1QzY3ejA Mannan Magal

*சுஜாதா நாவல்கள்*


https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONZV9wcnZNTzlLaU0?usp=drive_open

*சுபா நாவல்கள்*

https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONclVQRFZyc3BOZVE?usp=drive_open

*பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள்*

https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONSWFUR0VyNDNxcVE

 *சிறுவர் கதைகள்👇*

https://drive.google.com/open?id=1tjZ-sxD3yWJSzjYzXMKiEUMZ7T45XCwv


 *எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவல்கள் தொகுப்பு! 👇*
https://drive.google.com/open?id=0B-WHJQf1fFONZV9wcnZNTzlLaU0


 *சுபா நாவல்கள் தொகுப்பு👇*
https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONclVQRFZyc3BOZVE?usp=drive_open


*தமிழ் நூல்கள் - Google Drive👇*
https://drive.google.com/drive/mobile/folders/1AMNPuhyUfu1bAz0Fhp9daDupfITqRo3A/1xRdKySgb4bBno00HQqiNaZe3cz6UBxVo?sort=13&direction=a


 *சாண்டில்யன் நாவல்கள் தொகுப்பு👇*
 https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONX3JPU1VndmJVdnM?usp=drive_open


 *பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் தொகுபபு👇*
 https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONSWFUR0VyNDNxcVE

 *ராஜேஷ்குமார் & சாண்டில்யன் நாவல்கள்*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONWDVKcGdpLWh4clk

*Sandilyan*

👇👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/drive/mobile/folders/0B-WHJQf1fFONX3JPU1VndmJVdnM

ஹலோ mr. மோடி

இன்றைய தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.

கரோனோ தொற்றை எதிர்கொள்ள
இந்தியா உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது எதை?

சு.வெங்கடேசன் MP

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா தொற்றினை எதிர்கொள்ள மொத்த இந்தியாவும் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில், மருத்துவ துறையில் நம்முடைய நிலை என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கவனம் கொள்வோம். மருந்து உற்பத்தி துறையில் இந்தியா ”சூப்பர் பவர்” கொண்ட நாடு என்றே சொல்லலாம். இன்றளவும் அமெரிக்கா பயண்படுத்தும் மருந்தில் சுமார் ஐம்பது சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலகம் முழுவது பயண்படுத்தப்படும் தடுப்பூசி மருந்தில் சுமார் அறுபது சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 220 நாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றன.
அதனால் தான் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய சந்தையில் மருந்துகளின் விலை மிகக்குறைவு. இதற்கு சிறந்த உதாரணம் சொல்வதாக இருந்தால் ஹெச் ஐ வி க்கான மருந்து உலகசந்தையில் ஒரு லட்சமாக இருந்த போது, இந்திய நிறுவனம் சில ஆயிரம் ரூபாய்க்கு அதனை கொடுத்தது. 12500 க்கும் மேற்ப்பட்ட மருந்து தொழிற்சாலைகள் இந்தியாவில் இருக்கிறது. வருடத்துக்கு மூன்று லட்சம் கோடிக்கு நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் 50 சதவிகிதம் உள்நாட்டு சந்தை. 50 சதவிகிதம் வெளிநாட்டு சந்தை. இவற்றிலும் குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் 75 சதவிகித உற்பத்தி நடக்கிறது.

மருந்து உற்பத்தி துறையில், இவ்வளவு பெரிய பலத்தோடு இருக்கும் இந்தியா, மருத்துவமனையிலும், உள் நோயாளைகளைப் பரிகரிப்பதிலும் உரிய அரசு பொது மருத்துவம்னைகள்  பலத்தோடு இருக்கின்றதா? என்றால் சற்று தலைகுனியத்தான் வேண்டி உள்ளது. தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என்றால் ஜார்கண்டில் 8200 பேருக்கு ஒரு மருத்துவர் எனும் நிலை. உலகசுகாதார நிறுவனம் சொல்லும் குறைந்த பட்சம் 1000 நபர்க்கு ஒரு மருத்துவர் எனும் நிலை நம் நாட்டில் 6 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. 6இலும் தமிழகம்தான் முதலிடம் என்பது சற்று நமக்கு ஆறுதலான சேதி. உத்திரபிரதேசம் ஹரியானாவில் நிலைமை தலைகீழ். அங்கே 6000-4000 மக்களுக்கு ஒரு மருத்துவர்தாம்.

குரோனோ தொற்றினைப் பொறுத்தமட்டில், மருத்தவரின் எண்ணிக்கை மட்டும் பத்தாது. மருத்துவமனையின் உயர் சிகிச்சை அவசர சிகிச்சை பிரிவு மிக மிக அவசியம். Hit Hard எனும் வேகமாக சிகிச்சையைத் துவங்க வேண்டிய கட்டாயச் சூழல் இது. இத்தாலி  தோற்றுப்போனதும், சீனம் முதலில் திணறியதும் இவ்விடத்தில்தான்.  நேற்றைய முன் தினம்
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸின் பல்கலைக்கழகத்தின் நோய்பரவுதல், அதன் பொருளாதாரம் கொள்கைகள் பிரிவின் ஆய்வுத்துறையின் (CDDEP) அறிக்கைகள் நமக்கு பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. அதில் முக்கியமானது 21 நாள் ஊரடங்கில் மட்டும் நோய் நின்றுவிடாது என்பதுதான். இது அவசியம் என்றாலும் "இத்தோடு நோய் போய்விடும்" என அலட்சியமாக இருத்தல் கூடாது எனும் மன நிலை மக்களுக்குக் கூடாது. கூடவே கடும் பொருளாதார நெருக்கடிச் சூழலில், அவர்களின் தடலடியாக கூச்சலான நகர்வு, அதன்பின் ஆபத்தை கொடுக்க வாய்ப்பு அதிகம் என்கிறது அவர்களது ஆய்வுகள்.  முக்கியமாக, தற்போதைய கணக்கீட்டின் படி, சமூக பரவலின் வீரியம் ஏப்ரல் 4இல்துவங்கி ஏப்ரல் 25இல் 25 இலட்சம் நோயாளிகளை அதிக பட்சமாகவும் 12 இலட்சம் பேரை குறைந்த பட்சமாகவும் உள் நோயாளிகளாகவும், அவசரமாகவும்  சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம் என அவர்கள் கணிப்பு கூறுகின்றது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 7,13,986  படுக்கைகள் இருக்கலாம். . சரியாகச் சொல்லப்போனால், 2000 பேருக்கு ஒரு படுக்கை மட்டுமே உள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவிலோ ஏறக்குறைய முப்பது முதல் ஐம்பது ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மட்டுமே இருக்கலாம் என்று கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், குரோனோ சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்கள் மொத்தம் 1மில்லியன் என்கிறார்கள்.அதாவது பத்து இலட்சம். அவர்கள் கணக்குகள் நம்மை தலைசுற்றவும், சற்றே பயமுறுத்த வைக்கிறது. அவசர சிகிச்சைப்பிரிவில்சேர்க்க வேண்டிய நோயாளிகளின் எண்ணிகை 8 சதவிகிதமாக இருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரு சதவிகிதம் என்று எடுத்துக்கொண்டால் கூட நாம் நிலைமையைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை அடைவோம்.

குரோனா தொற்றுக்கு எந்தவிதமான மருந்துக் கண்டறியப்படாத நிலையில், 14 நாட்கள் நோயாளியின் உயிரைக்காக்கும் கவசமாக வெண்டிலேட்டர் மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு வெண்டிலேட்டரும் எண்ணற்ற மனித உயிர்களை காப்பாற்றும். உலக நாடுகள் பலவும் வயோதிகர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். எனவே இன்றைய உடனடி தேவை அரசு மருத்துவமனைக்கான வெண்டிலேட்டர்கள். அவற்றின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகப்படுத்த வேண்டும். அதற்கான திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும், முடிவெடுக்க தாமதமாகிற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் எண்ணிலடங்காத மனிதர்களின் உயிரோடு நேரடியாக சம்பந்தப்பட்டது.

அனுமானிக்கும் தேவையில்,  பத்து சதவீததுக்கும் குறைவாக வெண்டிலேட்டர்கள் இருப்பதும், முகக்கவசம் போல் அதிரடியாக அவற்றை வாங்கிக் குவிக்கும் நிலை இல்லாததும், கவனத்தில் கொள்ள வேண்டியது. இச்சூழலில் மிக முக்கியமாக நம் முன்னால் நிற்பது மூன்று விஷயங்கள்.
1. நோய்த்தொற்று வரவிடாமல் அல்லது தாமதப்படுத்தும் இந்த சமூக விலகலை மிக மிக முக்கியமாக ஒவ்வொரு குடிமகனும் புரிந்து நிறைவேற்ற வைத்தல்.
2. இன்னும் அதிகப்படியாக பெருவாரி மக்களை சோதித்து asymptomatic நிலையில் quarantine செய்வதும், ஆரம்பகட்ட நோய் அறிகுறி துவங்கையிலேயே முழு சிகிச்சைக்குத் தயாராவது
3. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முடிந்த வரை அனைத்து உபகரணங்களுடனும், மருத்துவர்களுடனும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடனும், மருத்துவர்களுடனும் தயார் நிலையில் வைத்திருப்பது...
Dhinamalar #COVID19 #suve4madurai #MaduraiMPnews

Wednesday, 25 March 2020

புத்தகங்களின் தொகுப்பறை


படிக்க மற்றும் download செய்ய விரும்பும் புத்தகத்தின் மீது அழுத்தவும் 















Tuesday, 24 March 2020

நோய்க்கு வழி ok சோறு க்கு?


பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ‌

21 நாட்கள் இந்திய தேசத்து மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே!

அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே,
கோவிட்19 என்கிற மிக பயங்கரமான தொற்றுநோய் பரவியுள்ள சூழ்நிலையில்,  தங்களது நலனை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

கொ‌ரோனா வைரஸை எதிர்கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் முற்றாக முடக்கம் செய்யப்படும் என்று தாங்கள் அறிவித்த பிரகடனத்தை கவனித்தோம்.

ஏழையிலும் ஏழையான பலவீனத்திலும் பலவீனமான மனிதர்களின் முகத்தை ஒரு கணம் மனதில் நிறுத்தி முடிவுகளை எடுங்கள் என்று மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

எந்தவிதமான நிவாரணமும் ஏழைகளுக்கு அறிவிக்காமல்,  அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை உத்தரவாதமாக செய்வோம் என்று குறிப்பிடாமல்,  அவர்கள் இருபத்தொரு நாட்கள் இந்த நாடு மூடப்பட்டிருக்கும் காலகட்டத்தில் உயிரோடு வாழ்வதற்கான எந்தவிதமான அவசர உதவியையும் அறிவிக்காமல் உங்களது பேச்சு பெருத்த ஏமாற்றத்தை எங்களுக்கு அளித்திருக்கிறது.

உங்களது உரையில்,  இத்தகைய நாடுதழுவிய முடக்கத்தால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட போகிற,  குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு வேலை தேடி வந்த கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வுக்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் நீங்கள் அளிக்கவில்லை. அவர்கள் உணவையோ அல்லது 21 நாட்கள் தங்குவதற்கான இடத்தையோ உறுதி செய்யாமல் அதை பெறுவதற்காக அல்லது எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் திணறி இன்று இரவு முதல் செய்வதறியாது கையறு நிலையில் நிற்கப் போகிறார்கள்.
அவர்கள் எப்படி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று அடைவார்கள்?
அவர்கள் எப்படி இருபத்தொரு நாட்கள் பணமில்லாமல் அல்லது உணவுப் பொருட்கள் இல்லாமல் அல்லது காவல்துறையின் அராஜகத்தை எதிர்கொள்ளாமல்  உயிர் வாழ்வார்கள் என்று  நம்புகிறீர்கள்?

அவர்கள் பாதுகாப்புக்காக ஓடத் துவங்கி இருக்கிறார்கள். யாரேனும் துரத்துவார்களோ,  பிடித்து விடுவார்களோ,  அடித்து விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அவர்கள் ஓடத் துவங்கி இருக்கிறார்கள். அனேகமாக நள்ளிரவு முதல் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டு விடும். அவர்கள் தங்களது அடிப்படையான தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்வதற்கு வாய்ப்போ அல்லது பணமோ அல்லது எந்த விதமான உதவியும் அளிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள்.

கிட்டத்தட்ட 45 கோடி இந்தியர்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் 21 நாள் முடக்கம் காரணமாக எல்லோருடைய வேலையும் பறிபோக இருக்கிறது. ஏற்கனவே துயரத்தின் உச்சத்தில் சிக்கியுள்ள அவர்களது வாழ்க்கை எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்வே துயரின் பிடியில் சிக்கியிருக்கிறது. அவர்களது கூலிக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் நோய் பதற்றம் ஏற்பட்டு இருக்கிற நிலையில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள் விடப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுகிற சமூக தனிமைப்படுத்தல் என்பதன் அடிப்படையான நோக்கத்திற்கு எதிராக இந்த நடவடிக்கைகள் எல்லாம் அமைந்துள்ளன. மிகப்பெரிய தொற்றுநோயை எதிர்த்து நாம் போராட வேண்டிய தருணத்தில்,  பொருத்தமற்ற இந்த அறிவிப்புகளை செய்திருக்கிறீர்கள்.

உங்களது உரையில் சுகாதார நடவடிக்கைகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினீர்கள். அது எங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் அடிக்கடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருப்பவர். அடிக்கடி பொருளாதாரத்தில் உச்ச கட்டத்தை எட்ட போவதாக பேசிக் கொண்டிருப்பவர். ஆனால் வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே உங்களால் ஒதுக்க முடிந்திருக்கிறது. இந்தத் தொகை எந்த அளவிற்கு மிக மிக குறைவானது தெரியுமா?

ஒரு குடிமகனுக்கு வெறும் 112 ரூபாயைத் தான் நீங்கள் ஒதுக்கி இருக்கிறீர்கள்.  ஆனால் மிகப்பெரிய பணக்கார கார்ப்பரேட்டுகளுக்கு நீங்கள் எவ்வளவு ஒதுக்கி இருக்கிறீர்கள் தெரியுமா? அவர்களை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக என்ற பெயரில் கிட்டத்தட்ட 7.78 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறீர்கள்.

இன்னும் சொல்வதானால் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை மட்டும் அளித்து இருக்கிறீர்கள்

ஆனால் மிக மிக பயங்கரமான ஆபத்தான நோய் சூழலில் சிக்கியிருக்கிற நமது மக்களின் சுகாதாரத்திற்காக உண்மையில் இதைவிட மிக அதிகமாக அல்லவா செலவழித்து இருக்க வேண்டும்?

ஏன் நீங்கள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் பொருட்டு மிகப் பெரும் பணக்காரர்கள் மீது வரி விதித்து அந்த பணத்தை கையகப்படுத்தக் கூடாது என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கூட நாம் எச்சரிக்கப்பட்டோம். உலக அளவில் கொரோனா பாதிப்பு என்பது தீவிரமாகப் போகிறது என்பது கண் முன்னால் தெரிந்தது. ஆனாலும் கூட உங்களது அரசாங்கம் தேசிய சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கடுமையாகவே குறைத்தது. குறிப்பாக நாட்டின் மிக முக்கிய பெரிய மருத்துவ மனைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டன. தில்லியில் இருக்கிற மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட வெறும் 0.1 சதவீதம் அளவிற்குத்தான் சற்று கூடுதல் நிதியை பெற முடிந்தது.

இன்னும் குறிப்பாக ராஷ்டிரிய ஸ்வஸ்த்ய பீம யோஜனா என்ற தேசிய சுகாதார திட்டத்திற்கு பொது நிதி ஒதுக்கீடு 156 கோடி ரூபாயிலிருந்து வெறும் 29 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்தது போல 6,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நியாயமாக அது அதிகரிக்கப்பட்டு இருக்கவேண்டும். அதேபோல உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நிதி ஒதுக்கீடு என்பது 360 கோடி ரூபாயிலிருந்து 283. 71கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

இன்னும் அதிர்ச்சிகரமான முறையில்,  எளிதில் தொற்றக்கூடிய எளிதில் கண்டறிய கூடிய நோய்களுக்கான சுகாதாரம் நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது எந்த விதத்திலும் அதிகரிக்கப்படாமல் 2178 கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது.

உண்மையைச் சொல்வதானால் உங்களது அரசாங்கம் இந்தியாவின் சுகாதார செலவினங்கள் மீது கிரிமினல் தனமான வெட்டுக்களை கடுமையான முறையில் அரங்கேற்றியது.  இது இன்றைக்கு இந்தியாவை மிகப் பெரும் ஆபத்தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

உலக அளவில் கொரோனா நோய் பரவத் துவங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாத காலம் இந்தியாவுக்கு அவகாசம் கிடைத்தது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தொற்று உள்ளதா என பரிசோதனை செய்வதற்கான கருவிகளைக் கூட குறைந்த விலையில் நாடு முழுவதும் சப்ளை செய்ய முடியவில்லை. பரிசோதனை கருவிகள் மட்டுமல்ல,  அதற்கான நடைமுறைகள் அல்லது முக கவசம் மற்றும் வெண்டிலேட்டர்களை வாங்க வேண்டியதன் அவசியத்தைக் கூட அரசு உணர்ந்திருக்கவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும். மார்ச் 24ஆம் தேதி வரையிலும் இத்தகைய மிக முக்கியமான கருவிகள் நமக்கு தேவை என்பதைக் கூட உணராமல், அவை ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கூட நிறுத்தாமல் எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்காமல் உங்களது அரசாங்கம் அலட்சியம் செய்து இருக்கிறது என்பது மிகமிக அதிர்ச்சி தரத்தக்க உண்மையாகும்.

உங்களது உரையில் மாநில அரசுகள் முழுக்க முழுக்க சுகாதார நடவடிக்கைகளில் மட்டுமே அதிகபட்ச கவனத்தை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறீர்கள்.  ஆனால் இப்படிப்பட்ட ஒரு பதற்றமான தருணத்தில் உங்களது கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதையெல்லாம் மறந்து,  மத்தியப் பிரதேசத்தில் மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தை நிலைகுலையச் செய்து, கவிழ்த்து இருக்கிற ஒரு வேலையைத்தான் செய்து கொண்டிருந்தது.  இந்தியாவின் நாடாளுமன்றமும்,  நீங்கள் என்ன தேவை என்று கருதுகிறார்களோ அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் மறுபுறத்தில் கேரளாவில் ஆட்சி நடத்தும் இடது ஜனநாயக அரசாங்கமும் நாட்டில் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் வேறுசில மாநிலங்களும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளை செய்திருக்கின்றன. குறிப்பாக பாதித்தவர்களை பரிசோதிப்பது, அவர்களோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அவர்களைத் தேடிக் கண்டறிந்து பரிசோதனைக்கு உள்ளாக்குவது,  பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது,  அதற்கு மிக அதிகபட்சமான முக்கியத்துவம் தருவது என்கிற முறையில் மட்டும் அல்லாமல், இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உரிய பொருத்தமான பொருளாதார உதவிகளை அறிவித்திருப்பது என்ற முறையில் மிகச் சிறந்த பணியாற்றி இருக்கின்றன.  இவை எதையும் நீங்கள் குறிப்பிடவும் அங்கீகரிக்கவும் செய்யவில்லை.
அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை,  அவர்களது உணர்வுப்பூர்வமான பங்களிப்பை, அவர்களது சக்தியை, அவர்களது நிர்வாகத் திறமையை நீங்கள் ஒரு துளி அளவு கூட அங்கீகரிக்கவில்லை.

இந்த மிக மிகக் கடினமான தருணத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் அதிகபட்ச கவனத்தைச் செலுத்த வேண்டிய கடமையில் இருக்கிறீர்கள். இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் மிகத்தெளிவான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இந்த கடுமையான தருணத்தில் இருபத்தொரு நாட்கள் நாடே மூடப்படுகிற சூழலில் பொருளாதார உதவிகளைப் பற்றியும் அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிசோதனை, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டறிந்து அவர்களுக்கான சோதனை, பொது சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைகள் ஆகிய இரண்டு முனைகளிலும் நீங்கள் சரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இரண்டுமே மிக முக்கியமானவை.

இவையிரண்டும் தாமதப்படுத்தாமல் செய்யப்பட்டால் தான் மிகப் பெரும் கொள்ளை நோயை நாம் தோற்கடிக்க முடியும்.

கொரோனா  நோய்க்கு எதிரான இந்த மாபெரும் போராட்டத்தில் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

ஆனால் உங்களது அரசாங்கம் அனைத்தையுமே குடிமக்கள் பக்கம் தள்ளி விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, குடிமக்களை அனைத்து துன்பங்களை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் கேட்டுக் கொள்கிறீர்கள். ஆனால் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களை நாங்கள் கவனித்து கொள்கிறோம் என்று எந்தவிதமான உறுதி மொழியையும் அளிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

எனவே நமது மக்கள் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் உங்களை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

#சீத்தாராம்யெச்சூரி
பொதுச்செயலாளர்
#இந்தியகம்யூனிஸ்ட்கட்சிமார்க்சிஸ்ட்

மருத்துவ விழிப்புணர்வு


கவலைகளுடன் சில கேள்விகள்...


கடையநல்லூர் மக்களிடம் (குறிப்பாக இசுலாமிகளிடம்) கொரோனோ விழிப்புணர்வு போதிய அளவு இன்னும் ஏற்படவில்லை...


அரகமே இல்லாமல் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. வந்தவர்கள் தங்களை தனிமைபடுத்தவும் தயாராக இல்லை.

வெளிநாட்டிலிருந்து வந்தவருடன் இணைந்து இளைஞர்கள் தம் அடிப்பதற்கு கூடும் சங்கங்கள் பூட்டப்படவில்லை.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களையும் இணைத்துக்கொண்டு ஆடும் மாலை நேர  கிரிக்கெட்டும் மாறவில்லை. பல குழுக்களாக நூறுபேர் வரை ஓரே கிரவுண்டில் கூடி விளையாடுகிறார்கள். பட்டபடிப்புகள் படித்திருந்தாலும் ஓரே பந்து பலர் கைகளுக்கும் சுற்றிவருவது அந்த விளையாட்டின் இயல்பு என்பதை விளங்கவில்லை.

காலையில் கணவர் வீட்டில் இருப்பதும் மதியம் அம்மா வீட்டுக்கும் சுற்றி சுற்றி வரும் சுழற்சி மாறவில்லை. போகவேண்டாம் என சொன்னாலும் மாமி தரப்போ/மருமகள் தரப்போ அந்த பேச்சை கேட்பதற்கும் தயாரில்லை.

டீ கடையிலும்/திண்ணையிலும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு வெட்டியாய் கதையடிக்கும் பண்பு ஆண்களிடமும் பெண்களிடமும் ஏன் வயதானவர்களிடமும் மாறவில்லை.

பள்ளிவாசல்களில் ஜமாத்தாக சில நாட்களுக்கு தொழுகையை நிறைவேற்ற வேண்டாம் என ஆயிரம் மார்க்க சட்டங்கள் விளக்கங்கள் கூறி சவூதியில் தொழுகை வழிபாடு குறித்து நடைமுறைபடுத்தப்படும் விசயங்களை எடுத்துகூறி விளக்கினாலும், எதையும் ஏற்கமாட்டேன் என்றும் தன்னை தவிர அனைவரும்  இபாதத்களில்  நாட்டமில்லாதவர்கள் போலவும் சித்தரிக்கும் வகையில்...
ஜமாத் தொழுகையை பள்ளிவாசலில் ஏன் தொழக்கூடாது என்ற  வெட்டிக்காயிதா பேச்சு (அதிகபிரசிங்கித்தனம்) குறைந்தபாடில்லை. (ஹீலர் பாஸ்கரை பிடிச்சு உள்ளே தள்ளியது போல சில இஸ்லாமிய மார்க்க அறிஞர்களையும் உள்ளே பிடிச்சு போட்டா நல்லது)

அரசு அறிவித்துள்ள எந்த ஒழுக்கங்களையும் தடைகளையும் சரிவர பின்பற்றபடவில்லை. Social Distance ஐ அறவே பேணுவதில்லை.

ஒரு பால்குடி பழக்கம் உள்ள குழந்தைக்கு கொரோனொ தொற்று ஏற்பட்டு விட்டால் (அல்லாஹ் காப்பாற்றனும்) அந்த குழந்தையை  தனிமைப்படுத்த முடியுமா?
அந்த குழந்தையின் தாய் தன்குழந்தையை அரவணைப்பதை நிறுத்த முடியுமா?
முகமூடி அணிந்து குழந்தைக்கு அருகில் சென்றால் அச்சப்படாமல் இருக்குமா?அது எவ்வகையில் சாத்தியம்? என்ற கவலைகள் யாருக்கும் தோன்றியதாக தெரியவில்லை.

டெங்குவிற்கு பலியானதை போல ஒரு சில விக்கெட்டுகள் (இறைவன் நாடி) விழுந்தால் மட்டுமே விழிப்புணர்வு உண்டாகுமா? பிறருக்கு பரவுவதில் டெங்குவை விட பலமடங்கு வேகம் கொண்ட கொரோனா தாக்கினால் நம்மால் தாக்குப்பிடிக்கத்தான் முடியுமா? ஒரே நேரத்தில் நோய்தாக்குதல் ஏற்பட்டால் அதற்குரிய மருத்துவ வசதிகள் நம்ம ஊருல இருக்குதா?

வருமுன் காப்பதே சிறந்தது...
என்ற கருத்தை வலுயுறுத்தும் சில குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் 👇👇👇👇👇👇👇

1)இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்
(அல்குர்ஆன் )

2) நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:29)

03) ஆரோக்கியமான ஒட்டகத்துடன் நோயுள்ள ஒட்டகத்தை சேர்க்கவேண்டாம்

4) தொற்றுநோய் ஒரு இடத்தில் இருப்பதாக கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் நுழையாதீர்கள்
நீங்கள் இருக்கும் இடத்தில் தொற்று நோய்வந்தால் அந்த இடத்தை விட்டும் வெளியேறாதீர்கள்.

 5) இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;

Monday, 23 March 2020

கொரோனா எது சரி எது தவறு




கொரோனா - தெளிவான விளக்கம்

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா என்பவரின் நேர்காணலைப் பார்க்க நேர்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் அளித்திருந்தார். அந்த வீடியோவைப் பகிரலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர் ஸ்ரீகாந்த் சத்யநாராயணன், அந்த நேர்காணலின் சாரத்தை கேள்வி பதில்களாகத் தொகுத்துப் பதிவு எழுதியிருந்தார். எனவே, அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அப்படியே பகிர்கிறேன். அனைவருக்கும் சென்று சேர வேண்டிய விஷயம் இது. (நேர்காணலின் வீடியோ இணைப்பு முதல் கமென்ட்டில்.�)
*
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.
எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு 2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். நேர்காணலின் தமிழின் எழுத்துத் தொகுப்பு மட்டுமே என்னுடையது.
- Srikanth Sathyanarayanan

முதலில் நல்ல செய்திகள் —
• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களில் வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
• எல்லா விலங்கிலும் கூட கொரோனா வைரஸ் இருக்கிறது.
• சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
• பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை. (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
• குழந்தைகளிலும், கர்ப்பிணிப் பெண்களிலும் பாதிப்பின் வீரியம் குறைவே.
• ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
• உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவிற்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
• சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
• நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
• பாதிக்கப் பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே  ICU, Ventilator தேவைப் படும்.
• பதற்றம் தேவையே இல்லை.

இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்.
• புரளி நம்பர் 1 - வெய்யிலில் வராது.
— வெய்யிலில் கண்டிப்பாக வரும். வெயிலில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

• புரளி நம்பர் 2 - மாமிசம் தின்றால் வரும்.
— ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.

• புரளி நம்பர் 3 - நிறைய தண்ணீர் குடித்தால் வராது.
— தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.

• புரளி நம்பர் 4 - இளவயதினருக்கு வராது.
— வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும், ஆனால் வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம். (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.,)

• புரளி நம்பர் 5 - கிராமங்களில் வராது.
— காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவிற்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.

• புரளி நம்பர் 6 - மாற்று மருந்துகளில் குணமாகும்.
— எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவிற்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

• புரளி நம்பர் 7 - அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.
— இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப் பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப் பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.

• புரளி நம்பர் 8 - கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.
— வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஒரு இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

விழிப்புணர்வுத் தகவல்கள்
• அறியாமை நம்பர் 1 - முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.
— முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4-6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க்  அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

• அறியாமை நம்பர் 2. பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.
— இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாயகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.

• கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டுமா?
- புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.
- காற்றில் பரவும் வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
- பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.
- பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
- தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.
- பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results.

• ஏன் இவ்வளவு பதற்றம்?
புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலை தளங்கள். 99.5% புரளிப் பரிமாற்றங்கள்.

• என்ன செய்ய வேண்டும்?
1. தனிப்பட்ட சுகாதாரம்.
முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டிற்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்ட விஷயங்கள் தான். கொரோனா special இல்லை.
2. கூட்டம் தவிருங்கள்.

• முக்கியமாக எதை செய்யக் கூடாது.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

Via ஷாஜகான்

MM மீடியா



கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான இடைகால் ,சொக்கம்பட்டி ஆகிய ஊர்களில் பெரும்பாலான மக்கள் சவூதி துபாய் போன்ற அரபுநாடுகளில் பணி செய்து வருவதாலும் இப்பகுதி மக்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதாலும் அரசு கூடுதல் அக்கறையோடு இப்பகுதியில் கவனம் செலுத்தி வருகிறது அதனடிப்படையில் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிற 85 நபர்கள் அரசின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் மேலும் அவர்களில் கொரோனோ பாதிப்பில்லாத நபர்களும் கூட வெளியில் எங்கும் செல்லாமல் தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

 இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து திருவனந்தபுரம் வழியாக ஆம்புலன்ஸில்  ஊருக்கு வந்த காய்ச்சல் பாதித்து இருக்கிற ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் திருவனந்தபுரத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

Sunday, 22 March 2020

ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு

சங்கைக்குரிய இமாம் அவர்களின் சமூகத்திற்கு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முக்கிய அறிவிப்பு;
1 , வழக்கம்போல ஜமாஅத் தொழுகை தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் நடைபெறும்
2 , சுருக்கமாக தொழவைத்து மக்கள் விரைந்து கலைந்து செல்ல வேண்டும்
3 , மக்கள் மிகவும் அவசியமான காரியங்களுக்கு மட்டும் வெளியே வரவேண்டும்
4 , தேவையின்றி பொது இடங்களில் கூடுவதை தவிர்த்து கொள்ளவும்
5 , ஜும்ஆ தொழுகையில் பயானை சுருக்கமாகச் செய்யவும்
6 , பிள்ளைகளை வெளியில் சுற்ற விடாமல் வீட்டில் இருக்க அறிவுறுத்தவும்
7 , காய்ச்சல், இருமல் உள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள், இயலாதவர்கள், சிறு குழந்தைகள் ஆகியோரை வீட்டில் தொழுது கொள்ளச் சொல்லவும்
8 , கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்யவேண்டும் என வலியுறுத்தவும்
9 , உலகம் முழுவதும் வேகமாகப் பரவும் இந்த நோய் முற்றிலும் அகற்றப்படவும் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் துஆ செய்யுங்கள்
10 , மக்கள் நலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்துப்பு தரும் வகையில் செயல் படுவோம்.
இந்த விஷயங்களை மக்களுக்கு அறிவிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு;

செய்யது இப்ராஹிம் அன்வாரி
செயலாளர், ஜமாஅத்துல் உலமா சபை
கடையநல்லூர்.